tamilnadu

img

மோடியின் சேனை என இந்திய ராணுவத்தை அவமதித்தார்

பிரச்சார பேரணி ஒன்றில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட உத்தரப் பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதியனாத் இந்திய ராணுவத்தை மோடியின் சேனை எனக்கூறி அவமதிப்பு செய்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.கவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பல செயல்களில் ஈடுபட்டு வருவதோடு தோல்வி பயத்தில் தங்களது வேண்டியவாறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நேற்று தில்லி அருகே உள்ள காசியாபாத் என்ற இடத்தில் பா.ஜ.கவிற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகிஆதித்யனாத் ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


பிரச்சாரத்தின்போது முதல்வர் யோகிஆதித்யனாத் எதிர்க்கட்சியான காங்கிரஸாரை விமர்சிக்கும் நோக்கில் பேசியபோது, காங்கிரஸார் தீவிரவாதிகளுக்கு பிரியாணி அளிப்பவர்கள்; ஆனால் மோடியின் சேனை தோட்டாக்களை அளிப்பதாக பெருமை பேசினார். ஒரு நாட்டின் ராணுவத்தை ஒரு தனிநபரின் அடையாளமாக திரித்து நாட்டின் இறையாண்மையை கொலை செய்யும் பா.ஜ.கவின் வன்மத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

;